புதுடெல்லி, கோவை, செப்.
மிகப்பெரிய கேமிங் நிறுவனமான பாஸி கேம்ஸ்-ஆல் சமீபத்தில் துவக்கப்பட்ட ரம்மி பாஸி (ஆன்லைன் ரம்மி விளையாட்டு), தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச போட்டிகளை நடத்துகிறது.
500 ரூபாய் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கும் 200 ரூபாய் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கும் செப்டம்பர் 29 மற்றும் 30-ம் தேதி ஆகிய தேதிகளில் இலவச போட்டி நடைபெறுகிறது. இதற்கான பரிசுத்தொகை முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் ஆகும்.
இந்த போட்டிகள் மூலம் அதிக அளவிலான திறமையான ரம்மி பிரியர்களிடம் சென்றடையவும், அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டில் பங்கேற்குமாறு ஊக்கப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த போட்டிகளில் தங்களது திறமையை நிரூபிப்பதற்காக இலவச விளையாட்டில் பங்கேற்க விரும்புபவர்கள் இரண்டு குறியீடுகளை பயன்படுத்தி பங்கேற்கலாம். குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்தவர்கள் 5 என்ற குறியீட்டை பயன்படுத்தி ரூ.5 லட்சம் பரிசுத்தொகைக்கான போட்டியிலும், மற்ற போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் அதாவது ரூ.200 டெபாசிட் செய்தவர்கள் 2 என்ற குறியீட்டை பயன்படுத்தி ரூ.2 லட்சத்திற்கான போட்டிகளிலும் இலவசமாக பங்கேற்கலாம்.
இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்மி பாஸி இணை நிறுவனரான சுனித் வாரியாச் கூறுகையில், ரம்மிபாஸியில் நாங்கள் எங்களது மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த விளையாட்டு அனுபவத்தை வழங்க இருக்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க நாங்கள் தொடர்ச்சியாக புதுமையான மற்றும் வேடிக்கையான விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த போட்டிகள் மூலம், நாங்கள் நுழையாத பிற சந்தையில் நுழைய விரும்புவதோடு, இதன் மூலம் புதிய மற்றும் இதுவரை அறியப்படாத திறமைகளுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம். ரம்மி விளையாட்டு ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்துள்ள மிகபெரிய ஆதரவை தொடர்ந்து எங்களது விளையாட்டு பங்கேற்பாளர்களுக்கு பெரிய அளவிலான பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். ரம்மி விளையாட்டு ஆர்வலர்களை இணைக்கும் வியூகத்தின் ஒரு பகுதியாக, அனைத்து இலவச போட்டிகளிலும் பங்கேற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே ரூ.1000, ரூ.5000 என கிடைத்து வந்த உறுதி தொகையை, முறையே ரூ.2000 மற்றும் ரூ.10000 என உயர்த்தியிருக்கிறோம். இந்த சிறப்பான சலுகைகளோடு, மேலும் கூடுதலாக பணம் கட்டி விளையாடுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையானது அதே அளவு உயர்த்தப்படுகிறது என்று தெரிவித்தார்.